விதை நேர்த்தி

 

விதை நேர்த்தி

 விதை நேர்த்தி:

(i) பூசணக்கொல்லி விதை நேர்த்தி:

விதை மற்றும் மண் மூலம் பரவும் பூசண

நோய்களை தடுக்க கார்பன்டசிம் அல்லது கேப்டான் அல்லது டிரைசைக்ளோசோல்

மருந்தை 2.0 கி/கிகி விதை என்ற அளவில் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யலாம். 

அல்லது சூடோமோனாஸ் ஃபுளூரசன்ஸ் என்ற

உயிர் பூசணக்கொல்லியை 10 கி/கிகிவிதைஎன்ற அளவில் பயன்படுத்தலாம்.

(ii) உயிர் உர விதை நேர்த்தி:

ஓர் எக்டருக்கு தேவையான அளவு

விதையுடன் 600 கி அசோஸ்பைரில்லம் மற்றும்600 கி பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை1200 மிலி ஆறிய அரிசி கஞ்சி சேர்த்து கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

(iii) முளைகட்டுதல்:

விதை நேர்த்தி செய்த விதைகளை ஓர்

இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, நீரைவடிகட்டி, கோணிப்பையிலிட்டு ஓர் இரவு

முழுவதும் இருட்டறையில் வைத்து முளைகட்ட வேண்டும்.

 இவ்விதைகளை தயார் செய்த

நாற்றங்காலில் விதைக்க வேண்டும்.

Comments